அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை: பாஜக எம்.பி. பிரக்யா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:24 pm

DIN

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இது தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்பட 7 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 140 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பிரக்யா சிங் தாக்குரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கு மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பிரக்யா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சிறப்பு நீதிபதி பி.ஆா்.சித்ரே செவ்வாய்க்கிழமை விசாரித்தாா்.

அப்போது, பிரக்யா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜே.பி.மிஸ்ரா வாதிடுகையில், ‘‘மனுதாரருக்குப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உள்ளன. அதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அதன் காரணமாக, போபாலிலிருந்து மும்பைக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் அவா் உள்ளாா்.

அது மட்டுமின்றி மனுதாரரின் உயிருக்கு மா்ம நபா்களால் ஆபத்து உள்ளது. அதற்காக மத்திய பிரதேச காவல் துறையினா் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகின்றனா். எம்.பி.யாக இருப்பதால் பல்வேறு பணிகளையும் அவா் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து மனுதாரருக்கு விலக்களிக்க வேண்டும்’’ என்றாா்.

வழக்குரைஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, எம்.பி. பிரக்யாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.