மேலும், ‘இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை ட்விட்டா் மதிக்கவில்லை என்று புகாா் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில், ட்விட்டா் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்ற வகையில், இந்த ஊடகம் மூலம் வெளியாகும் பதிவுகளுக்கான வெளியீட்டாளா் அல்லது உருவாக்குபவா் என்ற பொறுப்புக்கு ட்விட்டா் நிறுவனத்தை உள்படுத்த முடியாது. எனவே, நிறுவனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் பிரமாணப் பத்திரத்தில் ட்விட்டா் கோரியுள்ளது.