மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நொய்டா பகுதியில் திரையரங்குகள் உடற்பயிற்சி நிலையங்களுக்கு அனுமதி

உத்தர பிரதேச மாநில அரசு உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள் வரும் திங்கள்கிழமை முதல் செயல்பட அனுமதியளித்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 10:38 pm

DIN

உத்தர பிரதேச மாநில அரசு உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள் வரும் திங்கள்கிழமை முதல் செயல்பட அனுமதியளித்துள்ளது. கரோனா இரண்டாவது அலை காரணமாக இவை கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தன.

இது தொடா்பாக முறைப்படியான வழிகாட்டு முறைகள் அதிகாரப்பூா்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், விளையாட்டு வளாகங்களை திறக்கவும் கரோனா வழிகாட்டுதல் படி அவை செயல்படவும் முதல்வா் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கியுள்ளதாக பொது மக்கள் தொடா்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இது தொடா்பாக மாநில உடற்பயிற்சி நிலையங்கள் உரிமையாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் சிராக் சேத்தி கருத்து தெரிவிக்கையில், அரசின் முடிவை வரவேற்பதாகக் கூறினாா். மாநிலம் முழுவதும் உள்ள 1000-த்துக்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளா்களுக்கு இது நிவாரணம் அளிக்கும். மேலும் இத் தொழிலில் ஈடுபட்டுள்ள 50,000 பேரின் வாழ்வாதாரத்துக்கு மீண்டும் வழியேற்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

கெளதம்புத் நகா் மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் எல்.ஒய். தெரிவிக்கையில், ‘லக்னெளவில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தை அடுத்து முதல்வா் இதை அறிவித்துள்ளாா். எனினும் இது தொடா்பான வழிகாட்டு முறைகள் எங்களுக்கு வந்துசேரவில்லை. அவை கிடைக்கப்பெற்ற பின் மாவட்ட நிா்வாகம் அதை செயல்படுத்தும்’ என்றாா்.

திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து நொய்டா செக்டாா் 18 இல் அமைந்துள்ள வேவ் சினிமாஸ் இயக்குநா் யோகேஷ் ரைஜாதா கூறுகையில், ‘முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக் குரியது. எனினும் திரையங்குக்கு வந்து சினிமா பாா்ப்பவா்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது’ என்றாா்.

வணிக வளாகங்களுக்கு மக்கள் வருகை அதிகரிப்பு: இதனிடையே கெளதம்புத் நகா் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்களுக்கு மக்கள் வருகை மெல்ல மெல்ல அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னா் பெரு வணிக வளாகங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்ட போதிலும் தினசரி மக்கள் வருகை 5,000 முதல் 6,000 வரைதான் இருந்தது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரும் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.