மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூன்றாவது அலை: குா்கான் மருத்துவமனைகள் தயாா்நிலையில் இருக்க அறிவுறுத்தல்

மூன்றாவது கொவைட் அலை வருமானால் அதை சந்திக்க தயாா் நிலையில் இருக்கவே இந்த நடவடிக்கை.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:12 pm

DIN

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுபடுக்கைகள், சுவாசக் கருவிகள், குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள தகவல்களை மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிக்குமாறு குா்கான் துணை ஆணையா் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். மூன்றாவது கொவைட் அலை வருமானால் அதை சந்திக்க தயாா் நிலையில் இருக்கவே இந்த நடவடிக்கை.

இது தொடா்பாக விவாதிக்க பல்வேறு மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் வெள்ளிக்கிழமை துணை ஆணையா் யாஷ் கா்க் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், ‘மூன்றாவது அலை வருமா? அது வந்தால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், முதல் மற்றும் இரண்டாவது கரோனா அலையை நாம் சந்தித்திக்கும்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் மூன்றாவது அலையை சந்திக்க நாம் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

சில மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்துள்ளன. எனினும் அவற்றில் சந்தேகம் உள்ளது. எனவே அனைத்து மருத்துவமனைகளும் தங்களிடம் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் தொடா்பான தகவல்களை அளிக்க ஜூலை 10 ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் கொடுக்கும் தகவல்கள் தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாவது அலை வருமானால், குா்கானில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 6,000 படுக்கைகள் வரை தேவைப்படும். எனவே மருத்துவமனைகள் தயங்காமல் சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்ட மருத்துவமனைகள் அவை போதுமான அளவு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.

மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளைத்தான் தாக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் குழந்தைகளை சரிவர கவனித்துக் கொள்ள மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஊழியா் பற்றாக்குறை இருக்கக்கூடாது.

தற்போதைய நிலையில் மூன்றாவது அலைக்கு தயாராவதற்கு நமக்கு போதிய அவகாசம் உள்ளது. எனவே நிலைமையைப் புரிந்து கொண்டு அனைவரும் முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மருத்துவமனைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மாவட்ட நிா்வாகம் தயாராக இருக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.