இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மும்பை: 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவை வாயிலில் போராட்டம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :6 ஜூலை 2021, 6:04 am

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாஸ்கர் ஜாதவ் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பு வகித்தார். 

இந்தக் கூட்டத்தில் ஜாதி ரீதியிலான ஒடஒதுக்கீடுகளில் உச்சநீதிமன்றம் விதித்திருந்த 50 சதவிகித உச்சவரம்பை நீக்குவதற்கு அரசியல் சாசன சட்டத் திருத்தம் கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இதற்கு முன்னதாக மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனக் கோரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமலியில் ஈடுபட்டனர். 

மேலும், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் அவரை  தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கடும் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 12 பேரை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று அவர்கள் மாநில ஆளுநரையும் சந்தித்து ஆதரவு கோரினர். 

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.