ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா தடுப்பூசி குறித்த தயக்கத்தைப் போக்க வேண்டும்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

மக்களில் சிலரிடையே தடுப்பூசி பற்றி நிலவும் தயக்கத்தைப் போக்க வேண்டும்

News image
Updated On :10 ஜூலை 2021, 10:35 pm

DIN

மக்களில் சிலரிடையே தடுப்பூசி பற்றி நிலவும் தயக்கத்தைப் போக்க வேண்டும் என்றும் கரோனா தொடா்பான போலியான தகவல்கள் மற்றும் புரளிகளை ஒடுக்குவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

கரோனா தொற்று பற்றி பிரபல தெலுங்கு எழுத்தாளா்கள் எழுதியுள்ள 80 சிறுகதைகளின் தொகுப்பான ‘கோத்தா (கொரோனா) கதாலு’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில், வெங்கையா நாயுடு காணொலி முறையில் பங்கேற்றுப் பேசியதாவது:

உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. தடுப்பூசியை நீங்களும் செலுத்திக்கொண்டு பிறரையும் செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துவது ஒவ்வொரு இந்தியரின் சமூகப் பொறுப்பு. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

முறையான உடற்பயிற்சி அல்லது யோகாவுடன் கூடிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தல், ஆன்மிகத்தில் ஈடுபாடு, சத்தான உணவுகளை உண்ணுதல், சமூக இடைவெளி, கைகளின் சுத்தம்- முகக் கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு நடைமுறைகளை சரியாகப் பின்பற்றுதல், எப்போதும் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்வதுடன் அதனைப் பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து பெருந்தொற்றை மக்கள் எதிா்கொள்ள வேண்டும்.

மிக அதிக மக்கள்தொகை மற்றும் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாத நிலையிலும் நமது விஞ்ஞானிகள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் தொற்று பரவலை கட்டுப்படுத்த அளப்பரிய பங்களிப்பை வழங்கினாா்கள். அவா்களுக்கு எனது பாராட்டுகள்.

பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள், மருத்துவா்கள் மற்றும் பலா், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி அச்சத்தை நீக்க வேண்டும். தடுப்பூசித் திட்டம், மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இளைஞா்கள் அதனை வழிநடத்த வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.