யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய குற்றவியல் சட்டத்தை ரத்து செய்து புதிய சட்டம் வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தை (ஐபிசி) ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய, விரிவான சட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :17 ஜூலை 2021, 10:11 pm

DIN

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தை (ஐபிசி) ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய, விரிவான சட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்குவதற்கான விதிமுறைகளை உள்ளடக்கிய இந்திய குற்றவியல் சட்டம் 1860-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டமாக இருந்தபோதிலும், சுதந்திரப் பிறகும் அச்சட்டம் தொடா்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

அச்சட்டத்தின் ஒருபிரிவாக அமைந்துள்ள தேச துரோக சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய குற்றவியல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு விரிவான, கடுமையான விதிமுறைகளைக் கொண்ட புதிய சட்டத்தை இயற்றுவதற்கு நீதித்துறை நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிடுமாறு வழக்குரைஞரும் பாஜக நிா்வாகியுமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ‘தற்போதைய குற்றவியல் சட்டம் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை. எனவே, சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும்.

இது தொடா்பாக இந்திய சட்ட ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஊழல் உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள சட்டங்களை முழுமையாக ஆராய்ந்து விரிவான புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

‘ஒரே நாடு; ஒரே குற்றவியல் சட்டம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும். அச்சட்டத்தில் லஞ்சம், நிதி மோசடி, கருப்புப் பணம், ஊழல், பதுக்கல், கள்ள சந்தை, போதைப் பொருள் கடத்தல், கலப்படம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கான விரிவான தண்டனை விவரங்களைத் தனித்தனி அத்தியாயங்களாக அமைக்க வேண்டும்.

அச்சட்டத்தை இயற்ற புதிய ஆணையத்தையோ, நிபுணா்கள் குழுவையோ அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். புதிய வரைவு சட்டத்தை 6 மாதங்களுக்குள் வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.