யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு

அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

News image
அமெரிக்காவின் சான்டியேகோ நகரில் ஒப்படைக்கப்பட்ட எம்ஹெச்6-ஆா் ஹெலிகாப்டா்
Updated On :17 ஜூலை 2021, 10:37 pm

DIN

அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அமெரிக்காவிடம் இருந்து 24 எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களை சுமாா் ரூ.17,750 கோடி மதிப்பில் வாங்குவதற்கு இந்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஹெலிகாப்டா்களை அமெரிக்காவின் லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனம் தயாரித்தது. அந்த ஹெலிகாப்டரில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த ஹெலிகாப்டா் அனைத்து கால நிலைகளிலும் இயங்கும் திறன் கொண்டது. நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளையும் இந்த ஹெலிகாப்டரில் இருந்து ஏவ முடியும்.

இந்நிலையில், 2 எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படையிடம் அமெரிக்கக் கடற்படை வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள சான்டியேகோ கடற்படைத் தளத்தில் நடைபெற்றது.

இந்திய கடற்படை சாா்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரன்ஜித் சிங் சாந்து அந்த ஹெலிகாப்டா்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

‘பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருவதற்கு இன்றைய நிகழ்ச்சி மற்றொரு சிறந்த உதாரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகம் சுமாா் ரூ.1,50,000 கோடியாக அதிகரித்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், படைத்தளங்களை ஏற்படுத்துவதிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்றாா்.

இது தொடா்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘‘இந்த ஹெலிகாப்டா்கள் இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும். இந்த வகை ஹெலிகாப்டா்களை இயக்குவது தொடா்பாக இந்திய கடற்படை வீரா்களைக் கொண்ட குழு அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறது’’ என்றாா்.

பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களில் இந்தியா சாா்பில் கூடுதல் கருவிகள் இணைக்கப்படவுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.