யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி: மல்லிகார்ஜுன கார்கே

கரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் பிரதமர் மோடி பழி ஏற்றுக்கொள்ளாமல் ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கியதாக மல்லிகார்ஜுன கார்கே விமரிசித்துள்ளார்.

News image
Updated On :20 ஜூலை 2021, 9:29 am

DIN


கரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் பிரதமர் நரேந்திர மோடி பழி ஏற்றுக்கொள்ளாமல் சுகாதாரத் துறை அமைச்சரை (ஹர்ஷவர்தன்) பலிகடா ஆக்கியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமரிசித்துள்ளார்.

இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் அவர் பேசியது:

"மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட கரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தில்லியில் கரோனா இரண்டாம் அலையின்போது மற்றவர்களுக்கு ஆக்சிஜன் விநியோகம், பிளாஸ்மா தானம் செய்து உதவியர்களை நான் வணங்குகிறேன்.

முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் பல மாநில தேர்தலில் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். உங்களது விதமுறைகளை நீங்களே மீறுகிறீர்கள். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

பாத்திரங்களை தட்டச் சொல்லியும், மெழுவர்த்தியை ஏத்தச் சொல்லியும் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்களும் அவரை நம்பி அனைத்தையும் செய்தனர். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். இதற்கான பழியை தான் ஏற்றுக்கொள்ளாமல் சுகாதாரத் துறை அமைச்சரை (ஹர்ஷவர்தன்) பலிகடா ஆக்கிவிட்டார்."

சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தின் முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார் ஹர்ஷவர்தன். இதன்பிறகு மன்சுக் மாண்டவியா புதிய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.