நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் உரை: காங். புறக்கணிப்பு

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவிருக்கும் உரையில் காங்கிரஸ் பங்கேற்காது என காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
Updated on
1 min read

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவிருக்கும் உரையில் காங்கிரஸ் பங்கேற்காது என காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் குறித்து நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் இரு அவைத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு விரிவான உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் உரையில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமெனவும், கரோனா குறித்த விரிவான அறிக்கையை அவைகளில் தாக்கல் செய்து விவாதிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மேலும் திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளும் அனைத்து உறுப்பினர்களின் முன்பு உரை நிகழ்தத வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைக்கு பின்னரே பிரதமரின் உரையில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com