வேளாண் சட்டங்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் போராட்டம்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் போராட்டம்
Updated on
1 min read

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல் காந்தி, அதீர் ரஞ்சன் செளத்ரி உள்பட காங். எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதராவாகவும் பதாகைகளை ஏந்தி காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூலை 19 முதலே சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com