திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

நாங்கள் என்ன குற்றவாளிகளா? ராகேஷ் திகைத்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குற்றவாளிகளா என பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்

Updated On :22 ஜூலை 2021, 5:56 am

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குற்றவாளிகளா என பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதனால், தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி அளித்ததையடுத்து ஜந்தர் மந்தர் நோக்கி விவசாயிகள் சென்று கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்தாண்டு குடியரசுத் தினத்தன்று நடைபெற்றது போல கலவரம் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த  ராஜேஷ் திகைத்,

நாங்கள் கலவரம் செய்பவர்களா அல்லது குற்றவாளிகளா. நாடாளுமன்றத்திற்கு 150 மீட்டர் தொலைவில் தான் ஜந்தர் மந்தர் உள்ளது. ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.