திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பஞ்சாப் காங். தலைவராக நாளை சித்து பதவியேற்பு: பங்கேற்பாரா அமரீந்தர்?

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நாளை பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூலை 2021, 11:25 am

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நாளை பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சித்துவை நியமனம் செய்தது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு உடன்பாடு இல்லாத நிலையில், நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என தேசிய பொதுச் செயலாளர் ஹரீஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹரீஸ் ராவத் கூறியதாவது, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவை வரவேற்கவுள்ளோம். இந்த நிகழ்வில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்தார்.

பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அக்கட்சிக்குள் உள்கட்சிப்பூசல் வலுத்து வருகிறது. மாநில முதல்வரும் கட்சியின் மூத்த தலைவா்களுள் ஒருவருமான அமரீந்தா் சிங்குக்கு சவால் விடும் வகையில் நவ்ஜோத் சிங் சித்து செயல்பட்டு வருகிறாா். பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரா் சித்து, மாநில அமைச்சராகப் பதவி வகித்து வந்தாா். எனினும் முதல்வருடன் ஏற்பட்ட மோதலில் அவா் பதவி விலகினாா்.

இதையடுத்து கட்சியில் முக்கிய பதவி வேண்டும் என சித்து கூறிய நிலையில் மாநில தலைவராக நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. சித்துவை தலைவராக நியமனம் செய்ய முதல்வர் அமரீந்தர் சிங் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தேசிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் தலைமையின் முடிவை ஏற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.