விஜய் மல்லையா சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய் மல்லையா (கோப்புப் படம்)
விஜய் மல்லையா (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பரோடா வங்கி, காா்ப்பரேஷன் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி உள்ளிட்டவற்றில் கடன் வாங்கிய தொழிலதிபா் விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா்.

அவரது கடனுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 11.5 சதவீத கூட்டு வட்டியை வங்கிகள் விதித்து வருகின்றன. அசலுடன் வட்டியையும் சோ்த்து விஜய் மல்லையா திரும்பி அளிக்க வேண்டும் என்று வங்கிகள் கோரி வருகின்றன.

இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன. அச்சொத்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தப் பாதுகாப்பை ரத்து செய்வதற்கு அனுமதி கோரி லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் விஜய் மல்லையாவின் சொத்துகள் மீதான பாதுகாப்பை அகற்றுவதற்கு அந்நாட்டு வங்கிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com