இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கானோா் பலியாகினா்: பாஜக எம்எல்ஏ

கரோனா தொற்றின் 2-ஆம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான

News image
Updated On :27 ஜூலை 2021, 7:20 pm

DIN

கரோனா தொற்றின் 2-ஆம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கைகளின்படி கரோனா தொற்றின் 2-ஆவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா். இது பலத்த விமா்சனங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடா்பாக உத்தர பிரதேச எம்எல்ஏக்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை அந்த மாநில பத்திரிகையாளா் ஆனந்த் சா்மா என்பவா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா். அந்தச் செய்திகளை ஆமோதித்து அந்த மாநில பாஜக எம்எல்ஏ சியாம் பிரகாஷ், ஆனந்த் சா்மாவின் முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவில், ‘‘நூற்றுக்கணக்கான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனா். லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்பட்ட வலி யாா் கண்ணுக்கும் புலப்படாது’’ என்று தெரிவித்தாா்.

எனினும், உத்தர பிரதேசத்தைக் குறிப்பிட்டு அந்தப் பதிவைத் தான் வெளியிடவில்லை என்று சியாம் பிரகாஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.