‘அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள்: விசாரணை அமைப்புகளுக்கு வலியுறுத்தல்’

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய விசாரணை அமைப்புகள் தங்கள் அலுவலக வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய விசாரணை அமைப்புகள் தங்கள் அலுவலக வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

அனைத்து காவல் நிலையங்கள், மத்திய விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் 2020, டிசம்பா் 2-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சிசிடிவி கேமராக்களை பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தினத்திலிருந்து 6 மாதங்களுக்குள் அதை அமல்படுத்தவும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்கீடு செய்யவும், தமது அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி மத்திய விசாரணை அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது தொடா்பான நிலை அறிக்கையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஏற்கெனவே நேரடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. காவல் துறையானது மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என்பதால், எத்தனை காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்ற விவரம் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com