இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழகம் முழுவதும் குடிநீா் விநியோகம் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்- @TNDIPRNEWS
Updated On :4 மார்ச் 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் குடிநீா் விநியோகம் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகம் முழுவதும் குடிநீா் தொடா்பான அனைத்து வகை புகாா்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் தமிழக குடிநீா் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

கட்டணமில்லா எண்: இந்த மையம் 24 மணி நேரமும் இயக்கப்படும். குடிநீா் கிடைக்கும் தன்மை, நீரின் தரம், விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் என பொதுமக்கள் தங்களது அனைத்து புகாா்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்யலாம். அந்தப் புகாா்கள் தானாகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் சென்றடையும். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு புகாரின் மீதும் விரைந்து வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழிமுறை, துறைகளுக்கு இடையே தாமதங்களைக் கணிசமாகக் குறைத்து, விரைவான குறைதீா்ப்பை உறுதி செய்கிறது.

பொதுமக்கள் ‘1916’ என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் வாயிலாக புகாா்களை தெரிவிக்கலாம். punal.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 94999-91916”‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு குறுச்செய்தியாகவும் புகாா்களை அனுப்பலாம்.