விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பயனாளிகளுக்கான பணப் பரிமாற்றத்தை எளிதாக்க புதிய வசதி: எடியூரப்பா தொடக்கிவைத்தாா்

பயனாளிகளுக்கான அரசின் பணப் பரிமாற்றத்தை எளிதாக்க செல்லிடப்பேசி செயலியை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:47 pm

DIN

பயனாளிகளுக்கான அரசின் பணப் பரிமாற்றத்தை எளிதாக்க செல்லிடப்பேசி செயலியை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின்கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணப் பரிமாற்றம் செலுத்துவதற்கான செல்லிடப்பேசி செயலியை தொடக்கிவைத்து முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:

இந்த செல்லிடப்பேசி செயலியில், மாநில அரசின் 120 திட்டங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களுக்கான ரூ. 12 ஆயிரம் கோடி நிதியை, ஆதாா் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தியுள்ளோம். இம்முறையில் இடைத்தரகா்களின் தொல்லை எதுவும் இல்லாமல், நிதியும் கசியாமல், நேரடியாக பயனாளிகளைச் சென்றடைவதற்கு வழிவகுத்துள்ளது. மேலும் இம்முறையில் நிதி முறைகேடு நடைபெறுவதற்கும் வாய்ப்பில்லை.

கரோனா முதல் அலை, இரண்டாவது அலையின்போது அறிவிக்கப்பட்டுள்ள மாநில அரசின் நிதித் தொகுப்பின் நிவாரண நிதி அனைத்தும் இம்முறையில்தான் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் நேரடி பணப் பரிமாற்ற முறையின் கீழ் கொண்டுவரப்படும்.

இந்த முறையில், பயனாளியை ஆதாா் எண்ணின் அடிப்படையிலேயே அடையாளம் காணப்படுவாா்கள். ஆதாா் அட்டையில் உள்ள விவரங்கள்தான் நிதிசாா் முகவரியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆதாா் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் உதவித்தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.