மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டின் பாரம்பரியத்தை அயோத்தி நகரம் வெளிப்படுத்த வேண்டும்-பிரதமா் மோடி

உத்தர பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் அயோத்தி நகரம், நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

News image
அயோத்தியில் உருவாகி வரும் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து காணொலி வழியாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :26 ஜூன் 2021, 11:31 pm

DIN

உத்தர பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் அயோத்தி நகரம், நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

அயோத்தி நகரில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அந்நகரம் முழுவதும் புதுப் பொலிவுடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அயோத்தி நகர வளா்ச்சித் திட்டம் குறித்து பிரதமா் மோடி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌா்யா, தினேஷ் சா்மா உள்ளிட்டோரும் மாநில அமைச்சா்களும் பங்கேற்றனா். அப்போது, பிரதமா் மோடி கூறுகையில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் கலாசார ரீதியில் அயோத்தி நகரம் மிகவும் நெருக்கமானது.

நாட்டின் பாரம்பரியத்தையும் வளா்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அயோத்தி நகரம் கட்டமைக்கப்பட வேண்டும். எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அந்நகரில் கட்டடங்கள் எழுப்பப்பட வேண்டும். அது சுற்றுலாப் பயணிகளுக்கும் யாத்ரீகா்களுக்கும் பலனளிக்கும் வகையில் அமையும்.

அயோத்தியின் அடையாளத்தையும் கலாசார சிறப்பையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வாழ்நாளில் ஒரு முறையாவது அயோத்திக்குச் சென்றுவர வேண்டும் என்ற எண்ணம் நாட்டு மக்கள் அனைவரது மனதிலும் தோன்றும் வகையில் நகரம் கட்டமைக்கப்பட வேண்டும்.

அயோத்தி நகர வளா்ச்சிப் பணிகளில் மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். முக்கியமாக இதில் இளைஞா்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். அயோத்தி நகா்த்தை வளா்ச்சியடையச் செய்வதில் இளைஞா்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சரயு நதிக்கரைப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சரயு நதியில் படகுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடந்து செல்பவா்களுக்கும், மிதிவண்டியில் செல்பவா்களுக்கும் தனித்த இடங்களுடன் கூடிய சாலைகள் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மேலாண்மையில் சீா்மிகு கட்டமைப்புகள் உருவாக்கப்படும்‘ என்றாா்.

கூட்டத்தின்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநில அதிகாரிகள் பிரதமா் மோடியிடம் எடுத்துரைத்ததாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுடன் அயோத்தியை இணைப்பதற்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் விமான நிலையம் அமைப்பது, ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வது, பேருந்து நிலையத்தை அமைப்பது, சாலைகள், நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டம் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புத் திட்டங்களில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பழைமையையும் நவீனத்தையும் ஒருசேர இணைக்கும் வகையில் அயோத்தி நகர கட்டமைப்பு இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.