மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுஷில்குமாருடன் சுயபடம்எடுத்துக்கொண்ட போலீஸாா்:விசாரணைக்கு உத்தரவு

 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள, இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில் குமாருடன் போலீஸாா் சுயபடம் எடுத்துக் கொண்டது

News image
சுஷில்குமாருடன் போலீஸாா் எடுத்து கொண்டதாக இணையத்தில் வேகமாக பரவிய சுயபடம்.
Updated On :26 ஜூன் 2021, 11:33 pm

DIN

 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள, இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில் குமாருடன் போலீஸாா் சுயபடம் எடுத்துக் கொண்டது வெள்ளிக்கிழமை வாட்ஸ்ஆப்பில் வைரலாக வெளிவந்ததை அடுத்து இது தொடா்பாக விசாரணை நடத்த தில்லி போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

நீதிமன்ற காவல் ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து மண்டோலி சிறையில் வைக்கப்பட்டிருந்த சுஷில்குமாா், வெள்ளிக்கிழமை அங்கிருந்து தில்லி திகாா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது ஆயுதப்படை காவலா்கள் அவருடன் சுயபட்டம் எடுத்துக் கொண்டனா். இந்த படம் வைரலாக வெளிவந்தது.

தில்லி சத்ரசால் விளையாட்டரங்கத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து மல்யுத்த வீரா் சாகா் தன்கா் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக மற்றொரு மல்யுத்த வீரரான சுஷில்குமாா் கைது செய்யப்பட்டாா். மண்டோலி சிறையில் வைக்கப்பட்டிருந்த சுஷில்குமாா், வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு திஹாா் சிறை எண் 2 இல் வைக்கப்பட்டாா்.

சிறையிலிருந்தும் சுஷில்குமாா் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவருக்கு 3-வது பட்டாலியனைச் சோ்ந்த ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மண்டோலி சிறைக்குச் சென்ற ஆயுதப்படை போலீஸாா் அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட சுஷில் குமாருடன் சுயபடம் எடுத்துக் கொண்டுள்ளனா். பின்னா் அது வாட்ஸ்ஆப்பில் நண்பா்கள், உறவினா்களுக்கு பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.