கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மும்பையில் உணவக ஊழியர்கள் 10 பேருக்கு கரோனா

மும்பையின் எஸ்.வி சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் உணவகத்தின் 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த 2 நாள்களுக்கு உணவகம் மூடப்பட்டது. 

News image
தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கரோனா
Updated On :5 மார்ச் 2021, 5:28 am

ANI

மும்பையின் எஸ்.வி சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் உணவகத்தின் 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த 2 நாள்களுக்கு உணவகம் மூடப்பட்டது. 

இதுதொடர்பாக பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 

எஸ்.வி. சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் உணவகத்தில் 35 ஊழியர்களில் 10 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, உணவகம் அடுத்த இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது என்று கூறினார். 

உணவகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதையடுத்து புதிய ஊழியர்களுடன் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கரோனா மையமான பாந்த்ரா குர்லா வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிரத்தில் இதுவரை 86,359 சிகிச்சையில் உள்ளனர். 20,49,484 பேர் இதுவரை குணமடைந்த நிலையில், 52,340 இறப்புகள் பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில், இந்தியாவில் மொத்தம் 1,76,319 பேர் சிகிச்சையிலும், 1,08,39,894 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 1,57,548 ஆக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.