பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திங்கள்கிழமை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திங்கள்கிழமை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

முன்னதாக மஸ்துங் மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புத் துறை இந்த நடவடிக்கையைத் தொடங்கியதாகவும், ஸ்ப்ளின்ஜி பகுதியில் 
உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மாகாண தலைநகர் குவெட்டாவில் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கனரக வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் சாதனங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com