வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மும்பையில் 4வது நாளாக முடக்கப்பட்ட பேருந்து சேவை

மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மும்பையில் உள்ள அனைத்து 250 பேருந்து பணிமனைகளும் வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

மும்பையில் 4வது நாளாக முடக்கப்பட்ட பேருந்து சேவை

Updated On :12 நவம்பர் 2021, 7:40 am

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மும்பையில் உள்ள அனைத்து 250 பேருந்து பணிமனைகளும் வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில பணிமனைகளின் தொழிற்சாலைகளில் மட்டும் தொழிலாளர்கள் வேலையை தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு நிர்வாகத்துடன் மகாராஷ்டிர சாலைப் போக்குவரத்துக் கழகத்தை இணைக்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் நடத்தி வரும் காலவரையற்றப் போராட்டம் காரணமாக நான்காவது நாளாக மும்பையில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பணிக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வியாழக்கிழமை மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பாராப் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.