பஞ்சாபில் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு அவசரகால அடிப்படையில் தீர்வு காணப்படும் என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதியளித்துள்ளார்.
பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் சென்றுள்ளார். தேர்தலுக்கான வாக்குறுதிகளை கேஜரிவால் தேர்தல் பரப்புரைகளில் அறிவித்து வருகிறார்.
அமிருதசரஸில் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை பேசியது:
"தில்லியில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியதைப்போல பஞ்சாபிலும் அரசுப் பள்ளியை மேம்படுத்துவோம். அதை எப்படி செயல்படுத்த முடியும் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்ற கட்சிகளுக்குத் தெரியாது. அவசரகால அடிப்படையில் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
18 ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகும் பஞ்சாப் ஆசிரியர்கள் அதிகபட்ச ஊதியமாக ரூ. 10,000 மட்டுமே பெறுகின்றனர். தில்லியில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமே ரூ. 15,000. தற்காலிகமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடி

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

விசிலுக்கென ஒரு சத்தம் இருக்கு அதைத் தாண்டி சத்தம் வராது! - தமிழிசை

ஆலியா பட் பிடிக்கும்; ஆனால்... சாரா அர்ஜுன் 9 வயதில் பேசிய விடியோ வைரல்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


