அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும்: கே.சி.வேணுகோபால்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2021, 12:15 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்திருத்ததையடுத்து, இன்று திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறுகையில்,

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முன்வந்தது நல்ல விஷயம். ஆனால், எம்.எஸ்.பி. மற்றும் போராட்டத்தின்போது உயிரிழந்த 800 விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசின் விளக்கத்தை நாடாளுமன்றத்தில் எதிர்பார்க்கிறோம் என்றார்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் குளிர் மற்றும் கரோனா பாதிப்பால் கிட்டத்திட்ட 800 விவசாயிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.