இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

துர்கா தேவி அவதரித்த 'மகாளய' நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

மகாளய நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :6 அக்டோபர் 2021, 6:07 am

DIN

துர்கா தேவி அவதரித்த நாளான மகாளய நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம், ஒடிசா, திரிபுரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 'மகாளய' தினத்தன்று துர்கா தேவி வழிபாடு நடக்கிறது. மகிஷாசுரனை அழிப்பதற்காக சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் துர்கா தேவியை புவியில் அவதரிக்க வைத்த நாள் 'மகாளய' தினம் என்று நம்பப்படுகிறது. இந்நாளில் வட மாநிங்களில் துர்கா பூஜை நடைபெறுகிறது. 

இதையடுத்து, மகாளய நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த மகாளய தினத்தன்று உலகப் பெருந்தொற்றை வீழ்த்துவதற்கான வலிமையை வேண்டி துர்க்கை அன்னையை வணங்குவோம். துர்க்கை அன்னையின் ஆசீர்வாதங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். நமது புவி வளம் பெறட்டும். சுபமான மகாளயம்!' என்று பதிவிட்டுள்ளார். 

நாளை முதல் நவராத்திரி பூஜை தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை 'மகாளய அமாவாசை' எனப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களின் ஆசியைப் பெற அவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நடைமுறை உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.