குறிப்பாக, அசாம், மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுல் உள்ளூர் காவல்துறை போல் கைது நடவடிக்கை மேற்கொள்ள எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய - பாகிஸ்தான், இந்திய - வங்கதேசம் ஆகிய சர்வதேச எல்லைகளை கொண்ட மாநிலங்களில் 50 கிமீ தொலைவுக்கு கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் சோதனை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 15 கிமீ தொலைவு வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூடுதலாக, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர், லடாக் ஆகிய மாநிலங்களில் கைது மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.