எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

ஜம்மு - காஷ்மீர்: 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

News image

ஐ.ஜி. விஜய் குமார்

Updated On :20 அக்டோபர் 2021, 7:25 am

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் தீவிரவாதிகளால் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில்,

“இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் அடில் ஆஹ் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், கடந்த வாரம் புல்வாமாவில் தொழிலாளரை கொன்றதில் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், கடந்த 2 வாரத்தில் மட்டும் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.