ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் தீவிரவாதிகளால் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில்,
“இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் அடில் ஆஹ் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், கடந்த வாரம் புல்வாமாவில் தொழிலாளரை கொன்றதில் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், கடந்த 2 வாரத்தில் மட்டும் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.”