சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்னை குறித்து கலந்துரையாடி வருகிறார்.
மேலும், தூய்மையான செயல்திறன் மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம் பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஹர்தீப்சிங் புரி மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.