இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாட்டை ஏமாற்றி ஏழை மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க முடியாது: மோடி உறுதி

தரகர்களோ ஊழலோ இன்றி அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 அக்டோபர் 2021, 11:01 am

DIN

நாட்டை ஏமாற்றுபவர்களும் ஏழை மக்களிடம் கொள்ளைடிப்பவர்களும் தப்பிக்க முடியாது என பிரதமர் மோடி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், மத்திய புலனாய்வு துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி, "ஊழல்கள் சிறிதயாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது மற்றவரின் உரிமைகளைப் பறிக்கிறது. 

நாட்டின் குடிமகனின் உரிமைகளை பறிக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்தை தடுக்கிறது. ஒரு தேசமாக நமது கூட்டு பலத்தையும் பாதிக்கிறது. நாட்டை ஏமாற்றியவர்கள், ஏழைகளை கொள்ளையடிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்கள் நாட்டில் மற்றும் உலகில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு இனி இரக்கம் காட்டப்படாது என அரசு நம்புகிறது.

இடைத்தரகர்கள் இல்லாமல் ஊழல் நடைபெறாமல் அரசின் திட்டங்களால் தங்களால் பயனடைய முடியும் என்று இப்போது மக்கள் நம்புகின்றனர். ஏமாற்றுபவர்களால் இனி தப்பிக்க முடியாது என மக்களும் இப்போது நம்புகிறார்கள். 

ஊழல், அமைப்பின் ஒரு பகுதி என்பதை புதிய இந்தியா ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வெளிப்படையான அமைப்பு, திறன்மிக்க செயல்முறை, சுமுகமான நிர்வாகம் ஆகியவற்றையே அவர்கள் விரும்புகின்றனர்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.