இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை? - சீதாராம் யெச்சூரி கேள்வி

தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :22 அக்டோபர் 2021, 12:51 pm

DIN

தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். மக்கள்தொகையில் 21 சதவிகிதத்தினர் மட்டுமே கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

100 கோடி தடுப்பூசி என்பது சாதனைதான். ஆனால், உலகில் 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள்தொகையை ஒப்பிடுகையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

பிரதமர் மோடி இந்த ஆண்டின் இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதியளித்தார். 

மக்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. அதுகுறித்து பிரதமர் இன்று ஏன் பேசவில்லை? பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் வேலையின்மை, பசி அதிகரிப்பு, உணவு தானியங்கள் வீணாக்குதல் என பல பிரச்னைகள் இருக்கின்றன. இதைப்பற்றி பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.