இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ள பிரதமர் மோடி

வயது வந்தோரில் நான்கில் மூன்று பேர் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

News image
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
Updated On :22 அக்டோபர் 2021, 3:47 am

DIN

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று காலை 10 மணிக்கு உரையாற்றவுள்ளார் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவை தொடர்ந்து இரண்டாவது நாடாக நூறு கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி பேசவுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி இன்று எழுதிய கட்டுரையில், இந்திய தடுப்பூசி திட்டத்தை அச்சத்தில் தொடங்கி தன்னம்பிக்கையில் முடிந்த பயணம் என குறிப்பிட்டுள்ளார். இப்பயணத்தின் காரணமாக, நாடு வலுப்பெற்றுள்ளது என்றும் அச்சம் அவநம்பிக்கைக்கு மத்தியில் திட்டம் வெற்றிபெற்றதற்கு மக்கள் அதில் வைத்த நம்பிக்கையே காரணம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் திறன் மீது சந்தேகம் எழுப்பிய நிலையிலும் ஒன்பதே மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். வியாழக்கிழமையன்று, 100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை படைத்த பின்பு, இந்த சாதனையை சாத்தியமாக்க உதவி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்திய அறிவியல் துறை, 130 கோடி மக்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் மோடி கூறினார்.

பின்னர் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, "அக்டோபர் 21, 2021 இந்த நாள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா 100 கோடி தடுப்பூசி அளவை கடந்திருக்கிறது. 100 ஆண்டுகளில் மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு இப்போது 100 கோடி தடுப்பூசி என்ற வலுவான பாதுகாப்பு கவசத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது" என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.