ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எதற்கு இந்தக் கொண்டாட்டங்கள்? 100 கோடி கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக கேள்வி எழுப்பும் சித்தராமையா

நாட்டில் 29 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் கொண்டாடி வருகிறது என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
எதற்கு இந்தக் கொண்டாட்டங்கள்? 100 கோடி கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக கேள்வி எழுப்பும் சித்தராமையா
Updated On :22 அக்டோபர் 2021, 2:23 pm

DIN

நாட்டில் 29 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் கொண்டாடி வருகிறது என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியைக் கடந்தது. 

100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இனிப்பு வழங்கி கொண்டாடியது. 100 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது தொடா்பான பாடலையும் திரைப்படத்தையும் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இந்நிலையில் நாட்டில் 29 கோடி மக்களுக்கு மட்டுமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தியதாக கொண்டாடி வருவது எதனால் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நாட்டில் இன்னும் 62 கோடி பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசி கூட செலுத்தப்படாத நிலையில் இந்தியாவின் பாதிப்பான நிலையை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி கொண்டாட்டங்களை நிறுத்திவிட்டு அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.