அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

50% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி: இலக்கை எட்டி கேரள அரசு சாதனை!

கேரளத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

News image
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
Updated On :29 அக்டோபர் 2021, 7:52 am

DIN

கேரளத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

கேரளத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் அங்கு தொடக்கம் முதலே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: 

கேரளத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியான 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளதை அடுத்து கேரள அரசு சாதனை படைத்துள்ளது. 

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94.58 சதவிகிதம் (2,52,62,175) பேர் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 50.02 சதவிகிதம் (1,33,59,562) பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். 

அதே நேரத்தில் நாடு முழுவதும் 18 வயதுக்கு  மேற்பட்டவர்களில்  77.37 சதவிகிதம் பேர் மட்டுமே முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 33.39 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர்.

திட்டமிடப்பட்ட சரியான முறையில் செயல்பட்டதால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடிந்தது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் 100 சதவிகிதம் பேரும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 

சிலர் சரியான நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவதில்லை. அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நினைவூட்டப்படுகிறது. சரியான நேரத்தில் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.