இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மோடிக்கு முன் போப் ஆண்டவரை சந்தித்த இந்தியப் பிரதமர்கள்

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி போப் பிரான்சிஸை சந்தித்ததன் மூலம் போப் ஆண்டவரை சந்திக்கும் 5ஆவது இந்தியப் பிரதமராகியுள்ளார்.

News image
'ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர், வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.
Updated On :30 அக்டோபர் 2021, 2:43 pm

DIN

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி போப் பிரான்சிஸை சந்தித்ததன் மூலம் போப் ஆண்டவரை சந்திக்கும் 5ஆவது இந்தியப் பிரதமராகியுள்ளார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் அழைப்பின்பேரில் ஜி - 20 மாநாட்டில் கலந்து கொள்தவற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரோமுக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் வாடிகனில் உள்ள போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் மோடி போப் பிரான்சிஸை இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தார்.

இதற்கு முன்னரும்கூட இந்தியப் பிரதமர்கள் போப் ஆண்டவரை சந்தித்துப் பேசியுள்ளார். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோவாவை இந்தியாவுடன் இணைப்பதற்கு போர்த்துகீசியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 20 பேர் பலியானதையடுத்து நேரு பொருளாதார தடையை விதித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக போப் உடனான தனது சந்திப்பில், கோவாவில் நடப்பது ஒரு அரசியல் பிரச்னை எனவும் மதப் பிரச்னை அல்ல எனவும் முன்னாள் பிரதமர் நேரு தெளிவுபடுத்தினார்.

அதேபோல் 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இரண்டாவது போப் ஜான் பாலை சந்தித்து பேசினார்.

அவரைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர்களாக இருந்த ஐ.கே.குஜ்ரால் 1997ஆம் ஆண்டும், அடல் பிகாரி வாஜ்பாய் 2000ஆம் ஆண்டிலும் அப்போதைய போப் ஆண்டவரை சந்தித்து பேசியுள்ளனர்.

நான்காவது போப் பால் முதன்முறையாக 1964ஆம் ஆண்டு சர்வதேச நற்கருணை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் மும்பைக்கு வருகை புரிந்தார். அவரைத் தொடர்ந்து போப் இரண்டாம் ஜான் பால் 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும், 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

போப் ஆண்டவர்களின் வருகையின் போது விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.