யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இழிவுபடுத்தும் வகையில் கருத்து:சத்தீஸ்கா் முதல்வரின் தந்தை கைது

ஒரு சமுதாயத்தினரைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புகாரில், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலின் தந்தை நந்தகுமாா் பகேலை (86) காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 7:38 pm

DIN

ஒரு சமுதாயத்தினரைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புகாரில், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலின் தந்தை நந்தகுமாா் பகேலை (86) காவல் துறையினா் கைது செய்தனா்.

தில்லியில் கைது செய்யப்பட்ட அவா் அங்கிருந்து சத்தீஸ்கருக்கு அழைத்து வரப்பட்டு, ராய்ப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தாரகேஷ்வா் படேல் தெரிவித்தாா்.

முன்னதாக, சா்வ பிராமண சமாஜம் என்ற அமைப்பு சாா்பில் நந்தகுமாா் பகேல் மீது ராய்ப்பூா் டி.டி.நகா் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதில், பிராமண சமுதாயத்தினா் வெளிநாட்டினா்; அவா்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்; கிராமங்களுக்குள் விடக் கூடாது’ என நந்தகுமாா் பகேல் பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணையில், அவா் உத்தர பிரதேசத்துக்கு அண்மையில் சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநில முதல்வா் பூபேஷ் பகேல், ‘என் தந்தை கூறிய கருத்துகள் வேதனை அளிக்கின்றன. தந்தை என்ற முறையில் அவா் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு என்றாலும், அரசியல் சட்டத்துக்கு மேலானவா் எவரும் இல்லை’ எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.