மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜராத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? மூத்த பாஜக தலைவர்கள் சந்திப்பு

பாஜக மூத்த தலைவர்கள் குஜராத் மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு, மாநிலத்தின் அடுத்த கட்ட முதல்வர் யார் என்ற முடிவு எடுக்கப்படவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :12 செப்டம்பர் 2021, 6:17 am

DIN

குஜராத் முதல்வர் பொறுப்பிலிருந்து விஜய் ரூபானி விலகியதையடுத்து, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்படுத்தற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ராஜினாமா செய்ததற்கான காரணத்தை வெளியிடாமலேயே விஜய் ரூபானி பதவி விலகினார்.

குறிப்பாக, மாநிலத்தின் வளர்ச்சி பாதை புதிய தலைமையின் கீழ் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி தொடர வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, குஜராத் மாநில தலைவர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். மத்திய அமைச்சரும் குஜராத் மாநில மேலிட பார்வையாளருமான பிரகலாத் ஜோஷி இதுகுறித்து கூறுகையில், "குஜராத் பாஜக தலைவர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளேன். அதற்கு பிறகு, அடுத்த முதல்வர் யார் என்று அறிவிக்கப்படும்" என்றார்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக தேசிய செயலாளர் தருண் சுக் ஆகியோர் பாஜக மாநில தலைவர் சி. ஆர். பாட்டீலை அவரது வீட்டில் இன்று காலை சந்தித்து பேசினர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களான மன்சுக் மாண்ட்வியா, பர்ஷோத்தம் ரூபாலா, லட்சத்தீவு நிர்வாக அலுவலரான பிரஃபுல் கோடா படேல், குஜராத் மாநில வேளாண்துறை அமைச்சர் ஆர்.சி. ஃபால்டு ஆகியோரிலிருந்து ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.