தில்லியில் கட்டடம் ஒன்றின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்த 52 வயது பெண் உயிரிழந்தார். இதுகுறித்து தில்லி காவல்துறை, "முகர்ஜி நகரில் உள்ள நிரன்காரி காலனியில் வசிப்பவர் நேஹா வர்மா.
கணவர் தர்மா வர்மா வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்தபோது அவர் மாடியிலிருந்து குதித்துள்ளார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேஹாவும் அவரது கணவரும் அந்த வீட்டில்தான் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் அமெரிக்காவில் வாழ்ந்துவருகின்றனர். இந்த தம்பதியினர் விவாகரத்து கோரியுள்ளனர். குதிப்பதற்கு முன்பு, 'நான் உன்னை காதலிக்கிறேன்' என நேஹா கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்" என தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நேஹா மொட்டை மாடியிலிருந்து குதிப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி, நேஹாவின் செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் ஆராய்ந்துவருகின்றனர். அவரது மகன், மகள் தில்லி வந்த பிறகு, உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.