மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா முன்னாள் முதல்வர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்

கோவா மாநில முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.

News image
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த கோவா முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ.
Updated On :29 செப்டம்பர் 2021, 10:43 pm

DIN


கொல்கத்தா: கோவா மாநில முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவரான லூயிசினோ ஃபெலேரோ இரு நாள்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகியதுடன் எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார். அப்போதே, அவர் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசி இருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் ஃபெலேரோ இணைந்தார். திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செளகதா ராய், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திரிணமூலில் இணைந்த பிறகு ஃபெலேரோ பேசுகையில், "நான் எப்போதும் காங்கிரûஸ சேர்ந்தவன்தான். அதே கொள்கைகளைத்தான் இப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். பாஜகவை தோற்கடிப்பதுதான் எனது நோக்கம். இன்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததன் மூலம், எனது லட்சியத்தை நோக்கிய பயணத்தை மேம்படுத்தியுள்ளேன்' என்றார்.
முன்னதாக, ஃபெலேரோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினர்.
கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தனித்துப் போட்டியிட இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
2017 கோவா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து அக்கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர். இதில் 2019-இல் மட்டும் 10 எம்எல்ஏக்கள் மொத்தமாக விலகி பாஜகவில் இணைந்தனர். இப்போது, கோவாவில் காங்கிரஸூக்கு 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.