குறைந்த தொலைவு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் வகையிலான ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க | 'ரஜினிக்கு தைரியம் இருக்கிறதா ?'': சவால் விட்ட பிரபல இயக்குநர்
குறைந்த தொலைவு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் வகையிலான இந்த ஏவுகணை சோதனையானது வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுவதுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வகை ஏவுகணையானது 15 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.