கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாட்டில் இதுவரை 23.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

நாட்டில் கரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில், இதுவரை 23.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் இதுவரை 23.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :8 ஜூன் 2021, 4:25 am

DIN

நாட்டில் கரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில், இதுவரை23.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற்று மாநில சுகாதாரத் துறை சார்பில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 33,64,476 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 23,61,98,726-ஆக அதிகரித்துள்ளது.

இதில் 18.93 கோடி (18,93,54,930) பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4.65 கோடி (4,65,84,235) பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.