பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

‘நாடாளுமன்றத்தில் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்’: ராகேஷ் திகைத்

நாடாளுமன்றத்தில் சட்டங்கள் முறையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என  பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

News image

விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்

Updated On :19 நவம்பர் 2021, 6:04 am

நாடாளுமன்றத்தில் சட்டங்கள் முறையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என  பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் கூறுகையில்,

தற்போதைக்கு போராட்டங்கள் திரும்பப் பெறப்படாது. நாடாளுமன்றத்தில் முறையாக சட்டங்களை திரும்பப் பெறும் நாள் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.