இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தடுப்பூசி மீதான மக்களின் அச்சம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பில் தகவல்

இணைய வழியாக 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 அக்டோபர் 2021, 12:33 pm

DIN

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொள்ள 7 சதவிகிதத்தினர் மட்டும்தான் அச்சம் தெரிவித்துள்ளனர் என புதிய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளிலேயே குறைவான விகிதத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்த அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற இணையதளம் வழியாக 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், 67 சதவிகிதத்தினர் ஆண்களாகும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாததன் காரணத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துகணிப்பு நடத்தப்பட்டவர்களில், 42 சதவிகிதத்தினர் முதல் தர நகரை சேர்ந்தவர்கள். 27 சதவிகிதத்தினர் இரண்டாம் தர நகரையும் 31 சதவிகிதத்தினர் மூன்று, நான்கு மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவின் மக்கள் தொகையில் 94 கோடி பேர் வயது வந்தவர்கள். அதில், 68 கோடி பேருக்கு ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்து கொண்டுள்ளனர்.

கருத்துக்கணிப்பு குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனர் சச்சின் தபரியா கூறுகையில், "கருத்து கணிப்பு நடத்தப்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 46 சதவிகிதம் பேர் விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளனர்

தடுப்பூசி செலுத்தி கொள்ள திட்டமிடாத 27 சதவிகம் பேர் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உரிய பாதுகாப்பு அளிக்கிறதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.