காஷ்மீரில் தொடரும் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் அதனை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டு நிகழ்ந்து வரும் பனிபொழிவால் பல பகுதிகள் பனியால் மூடப்பட்டும் , ஆப்பிள் தோட்டங்களில் ஆப்பிள்கள் விழுந்து வீணாவதாலும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள். இதனால் இழப்பீடு கேட்டு தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆப்பிள் திருவிழாவை ஆரம்பித்து வைத்த ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ‘ காஷ்மீரில் ஏற்படும் அதீத பனிப்பொழிவை தேசியப் பேரிடராக அரசு அறிவித்துள்ளது. ஆப்பிள் தோட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் ‘ எனத் தெரிவித்திருக்கிறார்.