ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேரள பள்ளிகளில் செப்.6-ல் நேரடித் தேர்வுகள்: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் நேரடித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 செப்டம்பர் 2021, 11:29 am

ANI

கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் நேரடித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் 30,000க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளிகளில் நேரடி தேர்வுகள் நடத்த மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்,

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. நாள்தோறும் 35,000 பேர் பாதிக்கப்படும் நிலையில் குழந்தைகளை ஆபத்தில் விடமுடியாது. 

ஆகையால், கேரள அரசின் அறிவிப்பிற்கு இடைக்கால தடைவிதித்து அடுத்த விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.