நாட்டிலேயே 10 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம் என்று கூடுதல் தலைமைச்செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கனொலி வாயிலாக நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது, நாட்டிலேயே 10 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் ஒரு கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்
முறையான மருத்துவ வசதி காரணமாக டெங்கு, மலேரியா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.