கரோனா மூன்றாம் அலை அச்சுறுத்தல் தொடர்பாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மூன்றாம் அலை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தின் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்களை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தில்லி அரசு 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.