யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாதி, மதங்களை தாண்டி இளைஞர்கள் உயர வேண்டும்:  வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

சாதி, மதம் போன்ற குறுகிய கருத்துக்களை கடந்து இளைஞர்கள் உயர வேண்டும் என்றும் மற்ற மதங்களை "ஒருபோதும் அவமதிக்காதீர்கள்" என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

News image
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
Updated On :13 ஏப்ரல் 2022, 5:28 am

DIN

புது தில்லி: சாதி, மதம் போன்ற குறுகிய கருத்துக்களை கடந்து இளைஞர்கள் உயர வேண்டும் என்றும் மற்ற மதங்களை "ஒருபோதும் அவமதிக்காதீர்கள்" என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தெலுங்கு மாணவர்களுடன் உரையாடிய வெங்கையா நாயுடு,  வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தியவர், "சாதி, மதம் மற்றும் இதர குறுகிய கருத்துக்களை தாண்டி நீங்கள் எப்போதும் உயர வேண்டும், மற்ற மதங்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள்." 

சகிப்புத்தன்மை, பொறுமை, ஒழுக்கம், கடின உழைப்பு, வாசிப்பு மற்றும் பச்சாதாபம் போன்ற குணங்களை வளர்த்துக்கொண்டு இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் வெற்றிகரமான தலைவர்களாக ஆக்க வேண்டும்.

சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால் ஒருவர் தலைவராக முடியாது என்பதை குறிப்பிட்டவர், மக்களின் ஆணைக்கேற்ப தலைவர் நடக்க வேண்டும் என்றார்.  ஒரு தலைவர் திறமை, திறன், நல்ல நடத்தை மற்றும் பண்பு ஆகியவற்றைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும் என்றவர், நொறுக்குத் தீனிகளை உள்கொண்டு உடல்நலன்களை கொடுத்துக்கொள்ள வேண்டாண் எனவும் எச்சரித்தார்.

நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நமக்கெல்லாம் கரோனா பெருந்தொற்று சுட்டிக்காட்டிய நிலையில், ஆரோக்கியமான மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும் தாய்மொழியைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய நாயுடு, ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும் பிற மொழிகளில் பின்னர் புலமை பெறலாம் என்றும் நாயுடு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.