இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க.. என்ன செய்கிறார்கள் பாருங்கள்

பிகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து,

News image
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க.. என்ன செய்கிறார்கள் பாருங்கள்
Updated On :16 ஏப்ரல் 2022, 12:48 pm

DIN


பிகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, பாட்னா பல்கலைக்கழக வளாகம் தொடங்கி கட் நதிக்கரையோரம் வரை அமர்ந்து அரசுத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கியுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் ஒரேயிடத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையில் பேனா மற்றும் புத்தகத்துடன் அமர்ந்து அரசுத் தேர்வுகளுக்காக படிக்கும் அந்த புகைப்படங்களை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.

ரயில்வே, மாநில அரசுப் பணி தேர்வாணையம் உள்ளிட்ட பல அரசுத் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.  இங்கே வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் மாணவர்களுக்கு இலவசமாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை வாரந்தோறும் சுமார் 12 ஆயிரம் முதல் 14 பேர் எழுதுகிறார்கள்.

பொறியியல் பட்டதாரி முதல் பல உயர்கல்வி படித்த இளைஞர்களும் தன்னார்வத்தோடு பங்கேற்று இங்கே இளைஞர்களுக்கு கல்வி புகட்டி வருகிறார்கள்.

சுமார் 30 முதல் 35 பேர் குழுவாகச் சேர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். 

நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் விகிதம் 7.60 சதவீதமாகும். பிகார் மாநிலத்தின் வேலையில்லாத இளைஞர்களின் விகிதம் 14.4 சதவீதமாகும். நாட்டின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது பிகாரில். 2021ஆம் ஆண்டு டிசம்பரில் இது 16 சதவீதமாக இருந்து, பிறகு 2022, ஜனவரியில் 13.3 சதவீதமாகக் குறைந்து, பிப்ரவரியில் 14 அக உயரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.