அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சோனியா காந்தியுடன் சத்தீஸ்கர், ராஜஸ்தான் முதல்வர்கள் சந்திப்பு

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகெல் ஆகியோர் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினர். 

News image
கோப்புப்படம்
Updated On :20 ஏப்ரல் 2022, 8:00 am

DIN

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகெல் ஆகியோர் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினர். 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகிய இருவரும் தங்கள் மாநில அரசியல் சூழ்நிலை குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சோனியா காந்தியிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது. 

தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் 2024 பொதுத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேர்தல் வியூக நிபுணா் (ஐ-பேக்) பிரசாந்த் கிஷோர் நேற்று தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கடந்த 4 நாள்களில் 3 முறை சோனியா - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.